காதல் யுத்தம்.............


உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் நினைவுகள்
நினைவிழக்கிறது!
உறங்கச்சென்றால்
கண்கள்
ஒத்துழையாமை செய்கிறது!



  • உண்ணசென்றால்
    வயிறு
    உண்ணாவிரதம் மேற்கொள்கிறது!
  • மூளை
    மூலைக்கு மூலை இயங்க மறுக்கிறது,
    வேளைக்கு வேளை வேலை நிறுத்தம் செய்கிறது!
  • மொத்தத்தில்,
    உன்னால்
    என் உடலே கலவரமாக காட்சியளிக்கிறது!
  • ஒவ்வொருமுறையும்,
    கண்ணீர் புகையை வீசியே
    இந்த கலவரத்தை அடக்குகிறேன்.
  • ஆம்.
    கண்ணீரோடு
    என் நுரையீரலில் புகையை வீசியே!!!

0 comments:

கருத்துரையிடுக