உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் நினைவுகள்
நினைவிழக்கிறது!
உறங்கச்சென்றால்
கண்கள்
ஒத்துழையாமை செய்கிறது!
- உண்ணசென்றால்வயிறுஉண்ணாவிரதம் மேற்கொள்கிறது!
- மூளைமூலைக்கு மூலை இயங்க மறுக்கிறது,வேளைக்கு வேளை வேலை நிறுத்தம் செய்கிறது!
- மொத்தத்தில்,உன்னால்என் உடலே கலவரமாக காட்சியளிக்கிறது!
- ஒவ்வொருமுறையும்,கண்ணீர் புகையை வீசியேஇந்த கலவரத்தை அடக்குகிறேன்.
- ஆம்.கண்ணீரோடுஎன் நுரையீரலில் புகையை வீசியே!!!
0 comments:
கருத்துரையிடுக