என்னவளே உன்
புன்னகை மலர்களால்
நம்பிக்கை கொண்டேன்.
வாடி விழும் முன்பு
வாசனை தருவாயென-விழி
வாசல்தனை திறந்து வைத்தேன்.
என் இமைகளை அசைய வைத்து,
என் இரு விழிகளை நனையவைத்து,
என் இதயத்தை இருட்டாக்கியவளே
நான் இருளுக்குள் இருக்கிறேன்.
அன்பு என்ற வார்த்தைக்கு
உன் மௌனம்-என்
மனதினை திருடித் தின்றது.
கள்ளம் கபடமற்று
கைகோர்த்துத் திரிந்தவளே
உனக்கென எல்லாவற்றைவும்
உவந்தளித்தேன்.-என்
உயிரைக் கூட உனக்காக
விட்டுவைத்தேன்.
அன்று தொட்டு இன்று வரை
உன் நினைவுகளால்
நிஜங்களற்ற நிழல்களாகி
உருக்குலைந்து -இளமையிருந்தும்
முதுமையாகிப் போனேனடி.
முற்றுகையின்றி முடிவில்லாமல்
நீ உன்னதமற்ற காதலென
எனக்கு-கல்லறையின் பாதைகாட்டி
கைகழுவி போனாயே.
0 comments:
கருத்துரையிடுக