மறந்தும் கூட உன்னை மறக்க மாட்டேன் !!


உன் அழகிய வதனமும்
அன்பு நிறைந்த பேச்சும்
பூ போன்ற புன்னகையும்
எப்படி என்னை கட்டி இழுத்தன?

ஆண் வாசம் என்றாலே
விலகி நிற்கும் நான்
எப்படி உன்னில் மட்டும்
பைத்தியம் ஆனேன்?

காதல் என்றால் கல்லும் கனியும் என்று
நம் முன்னோர் சொல்லி சென்றது
உண்மை தான் போல
அதுதான் கனிந்து விட்டேனோ ??

வெட்டவெளியில் நின்று 
ஆகாயம் பார்க்கின்றேன்
நிலவு தானே தெரிகின்றது 
சுட்டெரிக்கும் பகலிலும் கூட !!

இது தான் காதலோ ??
என்னை மறந்தே நான் 
உன்னை நினைக்கின்றேன்
மறந்தும் கூட உன்னை 
மறக்க மாட்டேன் என்றும் !!

0 comments:

கருத்துரையிடுக