சிறு கவிதைகள்..............


காதல் காவியம்
காதல் வானிலே,
வாழும் காவியம் நாம்.
நிலவாய் நீ,
ஒளியாய் நான்.

தனிமை

காதல் தீவிலே,
நிலமாய் நான்….
தனியாய் என்று வருந்தினேன்!
கடலாய் நீ…
அலையாய் வந்து மோதினாய்..

காதல் மொழி.
ஊமைகள் கூட
பேசும் மொழி,
காதல் மொழி!

தேடல்
மலரை தேடி வண்டு வந்தது,
மகிழ்கிறாய்!
இரவை தேடி நிலவு வந்தது,
ரசிக்கிறாய்!
உன்னை தேடி நான் வந்தால் மட்டும்
ஏனடி வெறுக்கிறாய்?

அவளின் பிறந்த நாள்
பூவுக்கு பிறந்த நாளாம்!
புத்தாடை போர்த்திக்கொண்டது…
பூவிலும் அவள்
மல்லிகையோ ரோஜாவோ அல்ல..
அது வாடி விடும்.
அவளோ வாடா மல்லி
என்றென்றும் “வாடா மல்லி “!

சிக்கல்
காதல் புயல் என்றறிந்தும்
ஆண் மனம் மாட்டிக்கொள்கிறது!
காதல் தீ என்றறிந்தும்,
ஆண் குணம் சுட்டுக்கொள்கிறது!
காதல் சுழல் என்றறிந்தும்
ஆண் இனம் சிக்கிக்கொள்கிறது!

உனக்காக,
நான் புதிதாய் கற்றுக்கொண்ட மொழி,
மௌன மொழி!

கொலை
புயலில் பிழைத்து,
இடியில் தப்பித்து,
தீயில் நடந்து,
நீரில் தவழ்ந்து
உன்னை காண வந்தேன்
ஒரே புன்னகையில் என்னை கொன்றுவிட்டாயடி!

கனவு
நீ என்னிடம்
கனவிலாவது காதலிப்பாய் என்றுறங்கினால்
கனவு கூட,
கனவாகி போனது!

நேரம்
நீ இருக்கும் போது,
நேரம் போதவில்லை.
நீ இல்லாத போது,
நேரம் போகவில்லை!

காதல் என்ன  கெட்ட வார்த்தையா?
பரவாயில்லை,
பேசித்தான் பார்ப்போமே!

என் டைரி
உன்னை பார்த்த நாள் முதல்,
என்னிடம்,
என் டைரி கோபித்துக்கொண்டது.
எழுத்துச்சுமை அதிகமாகிறதாம்.
என் மனச்சுமை குறைவது தெரியாமல்……

விண்மீன்களை கண்களாக்கினான்,
சந்தனத்தை தோலாக்கினான்,
பளிங்கை உடலாக்கினான்
ஆனால்,
இதயம் மட்டும் கல்லாக்கிவிட்டானே!

பூக்கடையில்,
ஒவ்வொரு பூக்களும் அழகழகாய் இருந்தன,
நீ வரும் வரையில்!

புத்தகக்கடையில்,
ஒவ்வொரு புத்தகமும் அரிதாய் இருந்தன
நீ தொடும் வரையில்!


0 comments:

கருத்துரையிடுக