இதுவரை உணர்ந்ததில்லை


இருள் சுழ்ந்த இரவு என்
இதயத்தில் சிறு கனவு
கனவென்று தெரிந்திருந்தும்
கண்கள் அதையே விரும்புவதும்

தூரத்திலிருந்து ரசிப்பதும்
துரத்தித் துரத்தி வருவதும்
தூக்கத்திலிருந்து விழிப்பதும்
தூக்கமின்றி தவிப்பதும்

கண்ணாடி முன்னால் நிற்க
காட்டுது உன் முகத்தை
கதைப்பவர் குரலெல்லாம்
கேட்குது உன் குரலாய்

கூட்டத்தில் இருந்தும்
தனிமையை உணர்கிறேன்
தனிமையாய் இருந்தாலும்
இனிமையை உணர்கிறேன்

கண்கள் இமைக்க மறக்குது
உதடுகள் உச்சரிக்க மறுக்குது
பக்கத்தில் நீயிருக்க
படபடக்குது என் இதயம்

இதுவரை உணர்ந்ததில்லை
இப்படி ஒருபோதும்
இப்போ உணர்கிறேன் என்
இதயத்தில் இருப்பது நீயென்று...

0 comments:

கருத்துரையிடுக