ஓங்கி வழர்ந்த ஓர் ஒற்றைப் பனையடி.
ஊர்ந்து திரியும் பல எறும்புகளிற்கான
சந்துகளால் பிரிக்கப்பட்ட சரித்திர ஒழுங்கை.
பாரத்து வரவே நானும் போனேன்.
ஒற்றைப் பனையடி கட்டைக் கிழவன்
ஒய்யாரமாக உறங்கினான்,
பனை மட்டைப் பஞ்சணையில்.
கிட்டப்போக எனக்குச் சற்று ஐயம்!
எட்டிப் போனேன் சற்றுத்
தட்டிப் பார்த்தேன்-திடுக்கிட்ட கிழவன்
திக்கென்றெழுந்து பக்கென்று சொன்னான்,
வா மகனே! வா. என்று-பாசத்தின்
இதிகாசம் பரிந்துரைத்தான்.
ஏனையா? இப்படிப் படுக்கை....!
வினா ஒன்று கொடுத்தேன்.
இதை மட்டும் கேளாய்!
பதின்மூன்று வயதில் என் மூத்தவன்
படுத்துறங்கிய பஞ்சணையிதடா-இப்போ
(பாரிஸ்) நாட்டில் பணக்காரனானான்.
என் இளையவள் இதிகாசக் காதலால்
என் இருப்பிடமற்றாள்.
என் கடையவன் கனடா போய்
கதை மறந்தான்.-என்னவள்
இறைபதம் சென்றெட்டுமாதம்.
வேர் மட்டும் விழுதுகளற்று-இங்கு
உணர்வுகளற்று ஊன்றிக்கிடக்கு.
இது உனக்கெதற்கு-பாவம் நீ
பாதை வழியே பார்த்துப் போடாம்பி...




0 comments:
கருத்துரையிடுக